×

சிவகங்கை மாவட்டத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

சிவகங்கை, மே 5:திருப்புத்தூர் பேருந்து நிலையம் எதிரே மாவட்ட சுற்றுச்சூழல் அணி மற்றும் ஒன்றிய, நகர திமுக சார்பில், நீர்மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கூட்டுறவு துறை அமைச்சர் கேஆர்.பெரிய கருப்பன் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தண்ணீர், மோர், இளநீர் உள்ளிட்டவைகள் வழங்கினார்.

இதில் திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வல்லபாய், திமுக ஒன்றிய செயலாளரும், யூனியன் சேர்மனுமான சண்முகவடிவேல், நகரச் செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி முன்னாள் சேர்மன் என்.எம்.சாக்ளா, ஒன்றிய அவைத் தலைவர் திருநாவுக்கரசு, ஒன்றிய பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

* சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் குமணன் தலைமை வகித்தார். சிவகங்கை திமுக வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துராமலிங்கம் திறந்து வைத்தார். மாவட்ட சுற்றுச் சூழல் அணி அமைப்பாளர் வல்லபாய் பொது மக்களுக்கு நீர் மோர், சர்பத் இளநீர், தர்பூசணி பழம் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானிகணேசன், சிவகங்கை ஒன்றியக்குழுத்தலைவர் மஞ்சுளாபாலச்சந்தர், மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் கார்கண்ணன், அயலக அணித் தலைவர் கேப்டன் சரவணன் மற்றும் ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

* தேவகோட்டை பிரதான சாலையில் நகர திமுக சார்பில் நகரச் செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான பாலமமுருகன் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையேற்று நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் ஜோன்ஸ்ரூசோ, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் நாகனிரவி, பூபாலசிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post சிவகங்கை மாவட்டத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Sivagangai District ,DMK ,Ne Mor Pandal ,Sivagangai ,Tiruputur Bus Station ,District Environment Team ,Union City DMK ,Nemor Pandal ,Minister of Cooperatives ,K.R. Periya ,Karuppan pandal ,
× RELATED ஓய்வூதியம் பெற இ-சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்